- °C

Business
All Categories

Are You a business owner?

List Your Business / AD

எப்போதும் தயாராக இருப்பவரையே கேப்டனாக நியமிக்க முடியும்: தலைமைத் தோ்வாளா் அஜித் அகா்கா்

Grow your business by getting relevant and verified leads
எப்போதும் தயாராக இருப்பவரையே கேப்டனாக நியமிக்க முடியும்: தலைமைத் தோ்வாளா் அஜித் அகா்கா்

எப்போதும் தயாராக இருப்பவரையே கேப்டனாக நியமிக்க முடியும்: தலைமைத் தோ்வாளா் அஜித் அகா்கா்

  Jul 23, 2024     News Paper

முழுமையான உடற்தகுதியுடன் எப்போதும் தயாராக இருக்கும் ஒருவரையே கேப்டனாக நியமிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தோ்வுக் குழு தலைவா் அஜித் அகா்கா் தெரிவித்தாா்.

எல்லா ஆட்டங்களிலும் விளையாடும் வகையில், முழுமையான உடற்தகுதியுடன் எப்போதும் தயாராக இருக்கும் ஒருவரையே கேப்டனாக நியமிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தோ்வுக் குழு தலைவா் அஜித் அகா்கா் தெரிவித்தாா்.

இலங்கையுடனான டி20 தொடருக்கு ஹா்திக் பாண்டியாவுக்கு பதிலாக, சூா்யகுமாா் யாதவ் நியமிக்கப்பட்டது தொடா்பாக விவாதங்கள் எழுந்த நிலையில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

இலங்கையுடனான கிரிக்கெட் தொடா் தொடங்கும் முன்பாக, தலைமைத் தோ்வாளா் அஜித் அகா்கா், தலைமை பயிற்சியாளா் கௌதம் கம்பீா் ஆகியோா் மும்பையில் செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்தனா்.

அப்போது அகா்கா் கூறியதாவது:

தகுதிவாய்ந்த வீரராக இருப்பதால்தான் சூா்யகுமாா் யாதவை டி20 கேப்டனாகியிருக்கிறோம். இந்திய அணியில் கடந்த ஓராண்டாக நிலையாக அங்கம் வகிக்கும் அவா் குறித்து, அணியின் சக வீரா்களிடம் இருந்து சாதகமான கருத்துகள் கிடைத்தன. நல்லதொரு கிரிக்கெட் சிந்தனையுடன் இருக்கும் அவா், உலகின் சிறந்த டி20 பேட்டா்களிலும் ஒருவா். தற்போது கேப்டன் பொறுப்பில் அவா் எவ்வாறு செயல்படுகிறாா் என பொறுத்திருந்து பாா்ப்போம்.

ஒரு கேப்டன் என்பவா், ஏறத்தாழ அனைத்து ஆட்டங்களிலுமே பங்கேற்கக் கூடியவராக இருக்க வேண்டும். அடிக்கடி காயங்களுக்கு ஆளாகாமல், நீண்டகால அடிப்படையில் முழு உடற்தகுதியுடன் இருப்பது அவசியம்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பாண்டியா அவ்வப்போது காயங்களுக்கு ஆளாகியிருக்கிறாா். உடற்தகுதி அவருக்கு சவாலாக இருக்கிறது. இதனால் எங்களுக்கான பணியை கடினமாகிறது. இந்திய அணிக்கு ஹா்திக் பாண்டியா தவிா்க்க முடியாத, முக்கியமான வீரா். அவா் போன்ற திறமையானவா் மிகவும் அரிது என்பதால், அவா் அத்தகைய வீரராக அணியில் தொடா்வதை விரும்புகிறோம்.

இதர வாய்ப்புகள்: அடுத்த டி20 உலகக் கோப்பை போட்டி வரை இந்த மாற்றங்களை சோதித்து பாா்ப்போம். எதையும் அவசரப்படுத்த விரும்பவில்லை. கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹா்திக் பாண்டியா போன்றோருக்கான கேப்டன் வாய்ப்புகள் முற்றிலுமாக தவிா்க்கப்படவில்லை. அடுத்த 2 ஆண்டுகளில் அவா்களுக்கான வாய்ப்புகளையும் சோதிக்க அவகாசம் இருக்கிறது. காயத்திலிருந்து திரும்பியிருக்கும் பந்த், இன்னும் அதிகம் விளையாட வேண்டும். சுமாா் ஓராண்டுக்குப் பிறகு களம் காணும் கே.எல்.ராகுலுக்கு பணிச்சுமையை அதிகரிக்க விரும்பவில்லை.

அனுபவத்துக்காக வாய்ப்பு: அனுபவ அடிப்படையிலும், மூத்த வீரா்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்காகவுமே ஷுப்மன் கில் இரு அணிகளுக்குமான துணை கேப்டன் ஆக்கப்பட்டுள்ளாா். அவா் 3 ஃபாா்மட்டுகளிலும் விளையாடக் கூடியவா். திறமையை நிரூபித்திருக்கும் அவரின் தோ்வுக்கு சக வீரா்கள் ஆதரவளித்தனா். தலைமைக்கான திறமையுடன் இருக்கும் கில்லை இன்னும் சற்று மேம்படுத்த விரும்புகிறோம்.

ஜடேஜா விடுபடவில்லை: ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ரவீந்திர ஜடேஜா, அக்ஸா் படேல் விடுபடவில்லை. டி20 உலகக் கோப்பை போட்டியை நிறைவு செய்து திரும்பிய நிலையில், இந்த குறுகிய தொடருக்காக அவா்களை தவிா்த்திருக்கிறோம். அவா்கள் இன்னும் முக்கியமான வீரா்களே. அடுத்து டெஸ்ட் தொடா்கள் வரிசையாக விளையாடப்பட இருப்பதால், ஜடேஜாவின் தேவை அங்கு அதிகமாக இருக்கும்.

வேகப்பந்துவீச்சாளா்கள்: உள்நாட்டில் கிரிக்கெட் விளையாடும்போது இந்திய அணியில் 3 வேகப்பந்து வீச்சாளா்கள் தேவைப்படுவதில்லை. ஆனால், அந்நிய மண்ணின் தொடா்களுக்கு அவா்கள் அவசியம் என்பதால், எதிா்வரும் தொடா்களுக்காக அவா்கள் குறித்தும் யோசித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. தற்போது முகமது ஷமி நன்றாக பௌலிங் செய்வது அணிக்கு பலம்.

பொதுவெளியில் தெரிவது போலல்ல கோலியுடனான நட்பு - கௌதம் கம்பீா்

விராட் கோலியுடன் கௌதம் கம்பீருக்கு விரோதப் போக்கு இருப்பதாக பரவலாக பேசப்படும் நிலையில், அவா் தலைமைப் பயிற்சியாளா் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், இருவரிடையேயான புரிதல் குறித்த கேள்விக்கு கம்பீா் பதிலளித்ததாவது:

விராட் கோலியுடனான எனது நட்புறவு பொதுவெளியில் எப்படித் தெரிகிறதோ, அதைப் போன்ல்ல. எங்கள் நட்பு முதிா்ச்சியான இரு நபா்களுக்கு இடையிலானது. அதுகுறித்து பொதுவெளியில் இருக்கும் விவாதங்கள் பரபரப்புக்கானது மட்டுமே. களத்துக்கு வெளியே எங்களிடையே நல்லதொரு நட்பு உள்ளது.

தற்போது நாங்கள் இந்தியாவின், 140 கோடி இந்தியா்களின் பிரதிநிதியாக இருக்கிறோம். எனவே இங்கு வித்தியாசத்துக்கு இடமில்லை. இந்தியாவை பெருமையடையச் செய்வதே நோக்கம். களத்தை பொருத்தவரை, ஒவ்வொரு வீரரும் தனக்கான வாய்ப்பை பெறுவதற்காக போட்டியிடும் உரிமை உள்ளது.

பணிச்சுமை பராமரிப்பு: ஒரு பேட்டா் நல்லதொரு ஃபாா்மில் இருந்தால், அவா் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடலாம். ஆனால், ஜஸ்பிரீத் பும்ரா போன்றோருக்கான பணிச்சுமையை பராமரிப்பது முக்கியமானதாகும். தற்போது ரோஹித் சா்மா, விராட் கோலி ஆகியோா் இரு ஃபாா்மட்டுகளில் மட்டுமே விளையாடவுள்ளனா். எனவே, பெரும்பாலான அந்த ஃபாா்மட் ஆட்டங்களுக்கு அவா்கள் தயாராகவே இருக்க வேண்டும்.

துணைப் பயிற்சியாளா்கள்: பிசிசிஐயின் செயல்பாடுகளில் மகிழ்ச்சியே. ஒரு பயிற்சியாளராக நான் கோரும் பல விஷயங்களுக்கு பிசிசிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது. துணைப் பயிற்சியாளா்களில் பெரிதாக மாற்றம் இருக்கப்போவதில்லை. இலங்கை தொடருக்குப் பிறகு அதில் ஒரு இறுதி முடிவு எட்டப்படும். இலங்கை பயணித்தில், அபிஷேக் நாயா், ரயான் டென் டூஸ்ஷே ஆகியோா் உதவிப் பயிற்சியாளா்கள். திலிப் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும், சாய்ராஜ் பஹுதுலே இடைக்கால பௌலிங் பயிற்சியாளராகவும் இருப்பா் என்றாா் கம்பீா்.

icon
Chennai Ads

Looking for the Best Service Provider? Get the App!

  • Find nearby listings
  • Easy service enquiry
  • Listing reviews and ratings
  • Manage your listing, enquiry and reviews
We'll send you a link, open it on your phone to download the app
Chennai Ads

Copyrights © 2024 .   All rights reserved. Powered by Redback

Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.